மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் ஊடக கற்கை நெறியை கற்று வருகின்ற சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கருத்தமர்வு ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் 02.10.2020 அன்று இடம்பெற்றது. ஊடக கற்கை நெறியை மேம்படுத்தும் நோக்கில் மாணவர்களுக்கு குறித்த செயலமர்வு இடம்பெற்றது. இதில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்களை ஊடகத்துறை அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல, தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன்,அமைச்சுக்களின் செயலாளர்கள்,மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
|